மே.7
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் விளையாட்டில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கான விளையாட்டுகளை முழு திறனுடன் அணுகவும். அவர்கள் உயர்மட்ட போட்டிகளில் பங்குபெற்று சிறப்படையவும் வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் a Lab STAR (SPORTS TALENT ADVANCEMENT & RECOGNITION) அகாடமி அமைக்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் கரூர் மாவட்டத்திற்கு மாவட்ட மையத்தில் டென்னிஸ் விளையாட்டு தலைமையகம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.3.67,500/- ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மைத்திற்கு டென்னிஸ் பயிற்றுநர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மாணவ/மாணவியர்களுக்கான தேர்வில் 23 மாணவர்கள் மற்றும் 12 மாணவிகள் பங்குபெற்றனர். தேர்வு குழு மூலமாக 20 மாணவர்கள் மற்றும் 12 மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, மாவட்டகலெக்டர் தங்கவேல் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கு தலா ரூ.2500/- மதிப்பிலான விளையாட்டு சீருடைகள் மற்றும் விளையாட்டு காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குணசேகரன், தடகளப் பயிற்றுநர் சபரிநாதன், ஸ்டார் அகாடமி டென்னிஸ் பயிற்றுநர் ஸ்ரீனிவாசராவ், கேலோ இந்தியா ஜூடோ பயிற்றுநர் சண்முகம் கலந்து கொண்டனர்.