2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட ரோஹித் சர்மா ஆட்டநாயகன் வென்று. இந்தப் போட்டியில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை பெற்றார். ரோஹித் சர்மா கேப்டனாக இரண்டாவது ஐசிசி கோப்பையை வென்றார். இதுவரை ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் இறுதிப் போட்டியிலும் சொதப்புவார், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றெல்லாம் வைக்கப்பட்ட விமர்சனங்களை தவிடு பொடி ஆக்கினார்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங், ரோஹித் சர்மா வழக்கம் போல அதிரடி ஆட்டத்தை துவக்கத்தின் அடித்தளமாக்கினார். துபாய் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்த நிலையிலும் ரோஹித் பந்துகளை விளாசி தள்ளினார்.
மறுபுறம் சுப்மன் கில் 50 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் ரோஹித் நியூசிலாந்து வேகப்பந்துகளை பறக்கவிட்டார். அரைசதம் கடந்து 83 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார், ஏழு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து. 27-வது ஓவரில் ஆட்டம் இழந்தார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கி 26 ஓவர்கள் வரை நின்று ஆடி 76 ரன்கள் சேர்த்தார். அதன் பின் வெக்கட்டுகள் விழுந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் 48, அக்சர் பட்டேல் 29, கே.எல். ராகுல்சறப்பாக ஆடினர். ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இது பற்றி ரோஹித் கூறுகையில், ராகுல் டிராவிட் மற்றும் கௌதம் கம்பீரிடம் அதிரடி ஆட்டம் ஆடும் முறை பற்றி பேசி துபாயில் ஏற்கனவே சில முறை ஆடியதால் இந்த பிட்சை புரிந்து கொள்ள முடிந்தது. ஜடேஜா எட்டாம் வரிசையில் வருகிறார், அந்த அளவுக்கு பேட்டிங் வரிசையில் பலம் இருப்பதால் முதலில் அதிரடியாக ஆடுவதற்கு அது அதிக சுதந்திரத்தை அளிக்கிறது என்றார் ரோஹித் சர்மா.