ஏப்.25.
கரூர் மாவட்டம் நகர உட்கோட்டம், பசுபதிபாளையம் காவல் நிலையசரகம், புலியூர் சிமெண்ட்ஆலை அருகில் சிவக்குமார், வயது 38, அம்மாமுத்தம்பட்டி, உசிலம்பட்டி, மதுரை என்பவரும், வாசு (எ) குமரேசன், வயது 28, குஜிலியம்பாறை, திண்டுக்கல் மாவட்டம் நண்பர்கள்.இதில் குமரேசன் என்பவர் சிவக்குமாரிடம் இருடியம் இருப்பதாகவும், 5 லட்சம் கொடுத்தால் 15 லட்சமாக திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 20.04.2025 ஆம் தேதி 1) குமரேசன் 2) பொன்னர் (எ) பொன்னரசன், வயது 38, த/பெ மாரியப்பன், தெற்கு காந்திகிராமம், கரூர் 3) பால்ராஜ், வயது 40, த/பெ முருகன், தெற்கு காந்திகிராமம், கரூர் 4) தியாகு (எ) தியாகராஜன், வயது 43, த/பெ தண்டபாணி, தெற்கு காந்திகிராமம், கரூர் 5) சுரேஷ், வயது 41, த/பெ பழனிச்சாமி, தாந்தோணிமலை, கரூர் 6) ராஜ்குமார், வயது 38, த/பெ முருகையா, குஜிலியம்பாறை, திண்டுக்கல் மாவட்டம் ஆகியோருடன் சேர்ந்து காக்கி செல்லோடேப் சுற்றி இருடியம் பானை என ஒன்றைக் காண்பித்து கேரண்டி சொன்னதையடுத்து 2 லட்சம் மட்டும் பணம் கொடுத்துவிட்டு மதுரை சென்றுவிட்டு திரும்ப வந்து இருடியம் பானையை கேட்டபோது, மேற்படி நபர்கள் தர மறுத்து தன்னை மிரட்டி நம்பிக்கை மோசடி செய்ததாக சிவக்குமார் புகார் அளித்தார். இதனையடுத்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகளை தேடிவந்த நிலையில் 24.04.2025 ஆம் தேதி பசுபதிபாளையம் வட்ட ஆய்வாளர் அடங்கிய தனிப்படையினர் புலியூர் சிமெண்ட் பேக்டரி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது இன்னோவா காரில் வந்த மேற்படி 6நபர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்களிடமிருந்து காக்கி செல்லோ டேப் சுற்றிய பானை ஒன்றும், அவர்கள் வந்த இன்னோவா காரையும், மெடிக்கல் கிட் பாக்ஸ் ஒன்றும், ஆவணங்கள் அடங்கிய பைல் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் மேற்படி கைது செய்யப்பட்ட பால்ராஜ் மீது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு வழக்கு. திருநெல்வேலி மாவட்டத்தில்1 வழக்கும், சுரேஷ் மீது கரூர்; நகர காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ராஜ்குமார் திண்டுக்கல் மாவட்டத்தில்3 வழக்குகளும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவல் அடைப்பு பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.