• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Monday, July 14, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பண விவகாரம்: சிக்கிய போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை

karurxpress by karurxpress
February 5, 2025
in கரூர்
0
பெங்களூரில் இருந்து காரில் கடத்திவந்த குட்கா பொருட்கள் பறிமுதல்: ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
282
VIEWS

பிப்.6.

கரூர் மாவட்டம் வழியாக பெங்களூரிலிருந்து கார் மூலம் விற்பனைக்காக குட்கா பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட எஸ்.பி.க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெங்கமேடு காவல் சரகம், சின்னகுளத்துப்பாளையத்தில் கரூர் நகர உட்கோட்ட டி.எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் கரூர் நகர உட்கோட்ட கஞ்சா, குட்கா தடுப்பு தனிப்படையினரான எஸ்.ஐ. உதயகுமார், தாந்தோணிமலை எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார், கரூர் நகர, வெங்கமேடு காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் மற்றும் காவலர்களுடன் வாகன சோதனை நடத்தினர்.

அவ்வழியாக GJ 27 BS 4616 (Maruti Swift) என்ற குஜராத் மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூபாய் – 1,34,242/- மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் – 92.800 கிலோகிராம், கூல் லீப் – 19.150 கிலோகிராம், விமல் பான்மசாலா – 45.900 கிலோகிராம் மற்றும் V1 பாக்கு – 10.150 கிலோகிராம் உட்பட மொத்தம் 168 கிலோகிராம் குட்கா பொருட்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றியும், அந்த காரில் வந்த 1.கேவர்சன், 40/25, த/பெ.லால்சின், ஜலார், ராஜஸ்தான் மாநிலம் 2.சுரேஷ், 19/25, த/பெ.ஹரிராம், ஜலார், ராஜஸ்தான் மாநிலம் மற்றும் மேற்படி நபர்களுடன் தொடர்புடைய 3.ஹரிராம், 27/25, த/பெ.கபுரா ராம், ஜலார், ராஜஸ்தான் மாநிலம் ஆகியோரை கைது செய்து வெங்கமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். கடத்தல் தகவல் தெரியவந்தால் உடன் கரூர் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண். 9498100780 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா, தெரிவித்தார்.

குட்கா பறிமுதலின்போது கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரிடம் இருந்து, 1.25 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துவிட்டு அதனை கணக்கில் காட்டவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, போலீசாரிடம் விசாரணை நடத்த, திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், எஸ்ஐ.க்கள் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் கரூர் நகர காவல் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், சித்ராதேவி மற்றும் 5 போலீசாரிடம், திருச்சி மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபகாலமாக குற்றம் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது டிஸ்மிஸ், சஸ்பெண்ட், கைது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 179 இடங்களில் சிறப்பு முகாமகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 179 இடங்களில் சிறப்பு முகாமகள்

by karurxpress
July 11, 2025
0

ஜூலை.11. முதலமைச்சர் அவர்களால் "உங்களுடன் ஸ்டாலின் திட்டம்" வருகின்ற 15.07.2025 முதல் தொடங்கி...

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம்: பணி துவக்கம்

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம்: பணி துவக்கம்

by karurxpress
July 11, 2025
0

ஜூலை.11. துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி...

பாலக்காடு ரயில் குறுகிய கால நிறுத்தம்

by karurxpress
July 11, 2025
0

ஜூலை.11. பெருந்துறை ரயில்வே யார்டில் (ஈரோடு அருகே) ரயில் பாதைகளின் குறுக்குவெட்டுகளை சரிபார்த்தல்...

கரூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு: ரூ.162 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு: ரூ.162 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

by karurxpress
July 11, 2025
0

ஜூலை.10. கரூர் திருமாநிலையூரில் புதிதாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர்...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 179 இடங்களில் சிறப்பு முகாமகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 179 இடங்களில் சிறப்பு முகாமகள்

July 11, 2025
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம்: பணி துவக்கம்

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம்: பணி துவக்கம்

July 11, 2025

பாலக்காடு ரயில் குறுகிய கால நிறுத்தம்

July 11, 2025
கரூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு: ரூ.162 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு: ரூ.162 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

July 11, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved