ஜன.12.
கரூர் மாவட்டம் வெண்ணைமலை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC Gr.I Gr2, Gr2Aமுதன்மைத் தேர்வு, Gr IV, TET, TRB, TNUSRB, PC SI போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்பொழுது தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC Gr IV/VAO போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் 22.01.2025 முதல் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் SmartBoard இலவச Wifi வசதி அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி. பயிற்சி கால அட்டவணை. நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test) வாராந்திரத் தேர்வுகள் இணைய வழித்தேர்வுகள் online test முழு மாதிரி தேர்வுகள் – மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட TNPSC-Gr TNPSC Gr2 Gr2a TNUSRB TRB ஆகிய பயிற்சி வகுப்புகளில் அதிகபடியான மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 17.01.2025 தேதிக்குள் நேரடியாகவோ அல்லது 94990-55912 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை கரூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆண், பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.