பிப்.19.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய கட்டிடம் -திட்ட பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இளங்கோ அலுவலகத்தை பார்வையிட்டனர்.
முதலமைச்சர் அவர்கள், சட்ட பேரவை விதி எண்.110- ன் கீழ் அறிவித்துள்ளபடி. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய கட்டிடம் கட்ட திட்ட மதிப்பீடு ரூ.110.06 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தால் 16.08.2022-ல் தொடங்கி 14.07.2023-ல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இத்திட்ட நில பரப்பளவு 25 செண்ட்டில் நிலைய கட்டிட பரப்பளவு 2614 சதுர அடியில், இரண்டு வாகனங்கள் நிறுத்தும் இடமும், நிலைய அலுவலர் அறை மற்றும் பண்டக சாலை அறை மேலும் பணியாளர்களின் இரண்டு ஓய்வு அறைகள், ஒப்பனை அறைகள், மின் மோட்டார் அறையுடன் கூடிய தரை தள நீர் தேக்க தொட்டி 22000 லிட்டர் கொள்ளளவு கொண்டதும் மற்றும் உயர்நிலை நீர் தேக்க தொட்டி 8000 லிட்டர் கொள்ளளவு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடம் அரவக்குறிச்சி தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமுருகன், சந்திரகுமார். அரவக்குறிச்சி வட்டாட்சியர் வெங்கடேஷ் கலந்து கொண்டனர்.