ஜூன்.12.
கண் மருத்துவ சிகிச்சையில் புகழ்பெற்ற லோட்டஸ் கண் மருத்துவமனை கரூர் செங்குந்தபுரம் மெயின் சாலையில் திறக்கப்பட்டுள்ளது. கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் லோட்டஸ் கண் மருத்துவமனை 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கண் மருத்துவமனையாக திகழ்கிறது. டாக்டர் எஸ்.கே. சுந்தரமூர்த்தி நிறுவிய இம் மருத்துவமனையில் 7 லட்சம் பேருக்கு சிகிச்சையும், ஒரு லட்சம் பேருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. கோவையில் பீளமேடு, ஆர் எஸ் புரம், சரவணம்பட்டி, திருப்பூர், சேலம், மேட்டுப்பாளையம், கேரளாவில் கொச்சி மற்றும் மூலந்துருத்தி ஆகிய இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது.
கரூரில் அதிநவீன புதிய எந்திரங்களுடன் கூடிய மருத்துவமனையை அட்லஸ் நாச்சிமுத்து திறந்து வைத்தார். முன்னாள் சி.பி.ஐ இயக்குனரும் மருத்துவமனையின் இண்டிபெண்டன்ஸ் இயக்குனருமான டாக்டர் கார்த்திகேயன் மருத்துவமனையின், நிர்வாக இயக்குனர் சங்கீதா சுந்தரமூர்த்தி, செயல் அதிகாரி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் கே எஸ் ராமலிங்கம் ஆகியோர் பேசினர்.
கண்புரை மற்றும் கருவிழி அறுவை சிகிச்சைகள், லாசிக் ரெப்ராக்டிவ் அறுவை சிகிச்சைகள், கண் விழித்திரை பிரச்சனைகள், சர்க்கரையால் வரும் விழித்திரை பிரச்சனைகள், விழி வெண் படலம் மாறு கண் பார்வை மற்றும் குழந்தைகளுக்கான கண் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 12 மணி வரை இலவச கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என நிர்வாக இயக்குனர் சங்கீதா தெரிவித்தார்.