ஜன.17.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் குறித்து செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி ரசீதை வெளியிடுமாறு கூறினார்.
அதற்கு தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செல்வேன். அப்போது சொத்து பட்டியலை வெளியிடுவேன். திமுக தலைவர்கள் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும் என அண்ணாமலை பதிலளித்திருந்தார். அதற்கு செந்தில் பாலாஜி, ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேள்வி கேட்பது இதுதான் பல லட்சம் மதிப்புள்ள வாட்ச் க்கான ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். ஆடு வளர்த்து சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?. வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படி எல்லாம் பணம் கிடைக்குமா?. கடிகாரம் வாங்கிய ரசீது ஒரு மணி நேரத்துக்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம் போல எக்ஸ்எல் ஷீட் என ஏமாற்று பதில் தான் வருமா என பதில் கேள்வி எழுப்பினார்.
அடுத்து விமானத்தில் கதவை திறந்தது குறித்த விவகாரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி எழுப்பினார். இப்போது அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது பற்றி குறிப்பிட்டு அமைச்சர் தனது ட்வீட் டில் கூறி இருப்பது-
2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி. என் குறிப்பிட்டுள்ளார்.