பிப்.1.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ். கூறியது-
பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால்,
அறிவித்த வேட்பாளரை திரும்ப பெறுவோம். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். சின்னம் முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன். சின்னத்துக்கான படிவத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கையெழுத்து கேட்டால் போட்டுத் தர தயார்.
அதிமுகவின் செயல்பாட்டை தீர்மானிக்க வேண்டியது ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்தான் . பாஜக நிலைப்பாட்டை அறிந்து கொள்வதில் அவசரம் காட்டக்கூடாது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு நான் காரணம் இல்லை. இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தனிச் சின்னத்திலும் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார் என்றார்.