பிப்.9.
40 பேர் இறந்த பின்னரும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில்,
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது, ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 40 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?. எனக்கேட்டார்.
அதற்கு பதிலளித்த மாண்புமிகு ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஒரு மாநிலத்தில் நடைபெறும், குறிப்பிட்ட விவகாரம் குறித்து இங்கு பதில் கூற இயலாது.19 மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதாவை கொண்டு வந்துள்ளனர். அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் மசோதா கொண்டுவருவது குறித்து அரசு ஆலோசிக்கும். எனவே ஆன்லைன் சூதாட்ட சட்டத்தை ஆளுனர் கிடப்பில் போட்டிருப்பது குறித்து கருத்து கூற இயலாது” எனத் பதிலளித்துள்ளார்.