ஜன.13.
கவர்னர் ஆர்.என்.ரவி பொங்கல் விழா ஆளுநர் மாளிகையில்நடத்தினார். 1800 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. பொங்கல் விழாவில் முன்னாள் முதல்வர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கலந்து கொண்டனர். இருவருக்கும் சம மரியாதை இந்நிகழ்ச்சியில் அளிக்கப்பட்டது. விழா மேடையில் ஆளுநருக்கு இரு புறமும் இருக்கை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் பொங்கல் விருந்து நிகழ்ச்சியில் ஒரே மேஜையில் இருவரும் அமர்ந்து உணவு அருந்தினர்.
சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அருகில் அமர மாட்டேன் என இபிஎஸ் கடந்த கூட்டத்தொடரின்போது போராட்டம் நடத்தினார். போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டனர். தற்போது நடைபெற்று வரும் கூட்டத்திலும் கருப்பு சட்டை அணிந்து வந்து கலந்து கொண்டார். மேலும் ஓபிஎஸ் பக்கத்தில் அமர்வதை தவிர்த்து வருகிறார்.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை .
கவர்னரின் பொங்கல் விழா குறித்துநெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். அழைப்பிதழில் தமிழில் தமிழக அரசு என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் எம்பளமும் இடம்பெறவில்லை. எனவே பொங்கல் விழாவிற்கான செலவை மத்திய அரசிடம் இருந்து வாங்குவாரா அல்லது ஆளுநர் தனது சொந்த செலவில் செய்வாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.