ஏப்.22.
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்1352 காவல் சார்பு ஆய்வாளர்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பணிக்காலியிடங்களுக்கான நேரடித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளத்தில் https://tnusrb.tn.gov.in 03.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் 23.04.2025 முதல் நடத்தப்படவுள்ளது. மேலும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்விற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்புகளில் Smartbord Wifi வசதி அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வுகள் (spot test) வாராந்திர தேர்வுகள் இணைய வழித் தேர்வுகள் online test, முழு மாதிரி தேர்வுகள் மென்பாடக் குறிப்புகள் எடுத்துக் கொள் இணையதள கணினி வசதி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4, tnusrb, TRB பயிற்சி வகுப்புகளில் அதிக தேர்ச்சி பெற்று பல்வேறுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பயிற்சி வருப்பில் சேர விருப்பம் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.