டிச26
கரூர் வாங்கப்பாளையம் தீரன் நகரில் பாம்பு ஒன்று மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் அச்சம் அடைந்து கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு படையினர் குறிப்பிட்ட
இடத்திற்கு விரைந்தனர். மரத்தின் மேலிருந்த பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர். பின்னர் பாம்பு வனப்பகுதியில்
விடப்பட்டது.