ஆக.4.
கரூர் மாவட்டம், மாயனூர் காட்டூர் என்ற ஊரில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் மயில் ஒன்று தனது குஞ்சுகளுடன் தவறி விழுந்தது. இதுபற்றி தகவல் பெறப்பட்டதன் பேரில் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் உத்தரவின்படி சம்பவ இடம் சென்ற கரூர் தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி மயில் மற்றும் அதன் குஞ்சுகளை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.