ஏப்.20.
கரூர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகுளம்/கண்மாய் என ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் நடப்பு நிதி ஆண்டு 28 நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் / களிமண் ஆகியவற்றை விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்குவது குறித்த அறிவிப்பினை கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ளார்.
விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்படும் வண்டல்/களிமண் அளவு விபரம் பிள்வருமாறு-
விவசாய பயன்பாடு. அ) நஞ்சை நிலம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர்/25 யூனிட். ஆ) புஞ்சை நிலம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டல்/30 யூனிட்
மண்பாண்ட தொழில்-பயன்பாடு. மணிபாண்டம் தயாரித்தல். 60 கன மீட்டர் அல்லது 20 யூனிட்.
தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் கீழ் கட்டணமில்லாமல் விவசாய மேம்பாட்டிற்காக வண்டல் மண் /களிமண் பெறுவதற்கு மனு செய்வதற்கான நிபந்தனைகள்.
மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் / களிமண் தூர்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய கண்மாய்/ஏரி/குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் வட்டத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து பயனாளர்கள் பின்வரும் இணையதள முகவரி tnsevai.tn.gov.in (Online website) வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விவசாய பயன்பாட்டிற்கு அதே வருவாய் வட்டத்தில் வண்டல் மண்/களிமண் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் விசாயிகள் விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும் அல்லது விவசாய குத்தகை பதிவேட்டின் பதிவு செய்யப்பட்டு குத்தகைதாரராக இருக்க வேண்டும். மேலும், வண்டல் மண் / களிமண் விண்ணப்பிக்கும் விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் புல எண், விஸ்தீரணம், நில வகைப்பாடு, தேவைப்படும் வண்டல் / களிமண்ணின் அளவு, அனுமதி கோரும் கண்மாய் ஏரிகுளம் ஆகியவற்றின் விவரங்கள் மற்றும் மேற்கண்ட கனிமம் எடுக்க பயன்படுத்தப்படும் வாகனத்தின் பதிவு எண் போன்றவற்றுடன் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மண்பாண்ட நோக்கத்திற்கு அதே வருவாய் கிராமம் மற்றும் வட்டத்தில் களிமண் எடுத்து செல்வதையும் மண்பாண்டத் தொழிலின் உண்மைத் தன்மை மற்றும் விண்ணப்பதாராரின் வசிப்பிடம் குறித்து கிராம நிர்வாக அலுவலரால் சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப்பட வேண்டும். மேற்படி சான்றளிக்கப்பட்ட பின்பு சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியருக்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.