மார்ச்.15.
உலக கிளக்கோமா (கண்ணீர் அழுத்த நோய்) வாரம் மார்ச் 10 முதல் 16 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. “கண் நீர் அழுத்த நோய் இல்லாத உலகை உருவாக்க ஒண்றிணைவோம்.” என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள் இதனை முன்னிட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்நீர் அழுத்த நோய் குறித்த மருத்துவ மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனை முதல்வர் மரு. லோகநாயகி கொடியசைத்து துவக்கி வைத்தார் ; வெளி நோயாளிகளின் கண் பிரிவில் சிறப்பு கண்ணீர் அழுத்த பரிசோதனை முகாமையும் துவக்கி வைத்து பேசுகையில், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்பிரிவில் உலக கண்ணீர் அழுத்த நோய் வாரத்தை அனைத்து மருத்துவமனைகளில், செவிலியர்களுக்கு, மருத்துவமனை பணியாளர்களுக்கும் அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்கும் இலவசமாக கண்ணீர் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
கண்முறை பேராசிரியர் மரு. அணுராதா, கிளக்கோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய் பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலையே கண்றிந்து சிகிச்சை பெற்றால் பார்வைத்திறன் குறைவதை தடுக்க முடியும்: அலட்சியமாக இருந்தால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்தார்.