நவ..14.
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. படகில் தான் மக்கள் செல்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் கூட அமைக்கப்படவில்லை.
நான் மழையை வைத்து அரசியல் செய்கிறேன் என்றால் மு.க.ஸ்டாலின் செய்தது என்ன?. மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட நிதியை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.