கரூர். மார்ச் 27.
வி செந்தில் பாலாஜி அறக்கட்டளை நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 30 ம் தேதி தொடங்குகிறது. இலவச புத்தகங்கள்- டெஸ்ட் பேட்ஜ், 50 க்கும் மேற்பட்ட பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும் இந்த இலவச பயிற்சியில் சேர தேர்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நமது முயற்சி, கரூர் வளர்ச்சி என்கிற அடிப்படையில் வி. செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கரூர் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில் தொடங்க உள்ளன. பயிற்சி வகுப்புகளில் சேர்வோருக்கு இலவச புத்தகங்கள் புதிய பாடத்திட்டத்தின்படி வழங்கப்படுகிறது. இலவச டெஸ்ட் பேட்ஜ் வசதியுடன் தினசரி மற்றும் வீக்என்ட், வகுப்புகள் நடைபெறும். 50000 த்திற்கும் மேற்பட்ட பயிற்சி கேள்விகள் கொடுக்கப்படும். 50க்கும் மேற்பட்ட பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும். கலந்துகொண்டு பயனடைய விரும்புபவர்கள் 81481 92175
என்கிற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.