மே.16.
கரூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப்பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் காவிரி ஆற்றுப்பகுதியான தவிட்டுப்பாளையம், மாயனூர், வாங்கல் மற்றும் குளித்தலை கடம்பர் கோவில் பகுதிகளிலும் அமராவதி ஆற்றில் பசுபதிபாளையம், ஐந்து ரோடு பகுதிகளில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீ. ஆர்டிஓ முகமதுபைசல், தாசில்தார்கள் .இந்துமதி, தனசேகர் பார்வையிட்டனர்.
காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறக்கும் பொழுது ஏற்படும் பேரிடர்கள் குறித்தும், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய ஒத்திகை நிகழ்வுகள் நேரடியாக நடத்தப்பட்டது. தண்ணீரில் மூழ்கும் போது எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம், வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ளலாம். மீட்கப்பட்டவருக்கு முதலுதவி- அவசரகால ஊர்தியில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுதல். வெள்ளப்பெருக்கு அபாயத்தின் போது பொதுமக்களை எவ்வாறு வாகனங்கள் மூலம் அதிவேகமாக பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற்றுவது போன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒத்திகை நிகழ்ச்சியாக செய்து காட்டப்பட்டதாக கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, வருவாய்த்துறை. காவல்துறை, பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) ஊரகவளர்ச்சித் துறை. நகராட்சி நிர்வாகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை. நெடுஞ்சாலைத்துறை. மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.