நவ.14.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் குணசேகரன், சண்முகம் உள்ளிட்டோர் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் முகிலன் கூறுகையில்,
கடந்த ஏழு ஆண்டுகளாக கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் குப்பம் கிராமம் கல் குவாரியில் கனிம வள கொள்ளை நடைபெற்று வந்தது. அப்பகுதி விவசாயி ஜெகநாதன் தொடர்ந்து அரசிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜெகநாதனை கொலை செய்ய முயன்றனர். தப்பிய அவர் புகார் அளித்த பின்னர் சட்ட விரோத கல் குவாரி மூடப்பட்டது.குவாரி மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அடியாட்களுடன் சேர்ந்து கொலை செய்தார். விவசாயி ஜெகநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் செயல்பாடு தொடர்ந்து அநீதியாக உள்ளது. அடுத்த கட்ட போராட்டம் முன்னெடுக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் விவசாய ஜெகநாதனை கொலை செய்த குவாரி உரிமையாளர் செல்வகுமார் மீது தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். உரிமையாளர் உள்ளிட்டோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்றார்.