பால் விவசாயிகள்படும் வேதனையை விளக்கி சக்தி ராஜேஸ்வரி யின் பதிவு இது-
அதிகபட்சமாக பால் காரனுக்கு 29 ரூபாய்க்கு விவசாயிகள் பால் ஊற்றுகின்றனர். சேர்த்து போடுங்க பால் விலை எத்தனை முறை உயர்த்திருக்காங்கனு கேட்டால் ஆவின், அட்சன், திருமலா எல்லா ஆவரேஜ்ம் பாருங்கள் இதைவிட கம்மியாதான் வரும் என்கிறார் பால்காரர்.
காலைல 5 மணிக்கு என்ன உடம்பு சரி இல்லைனாலும் எழுந்து பால் கறக்கனும். நல்லது கெட்டது போறதுக்கு முன்ன கட்டாந்தரையை பெருக்கி வாரி சுத்தம் பண்ணி மறுபடியும் மதியம் தீனி போட வரனும்.
தீவனப்பில், நெல்லுப்பில், அதற்கு ஒரு ஆளுக்கான கூலி, தண்ணி, SKM அல்லது கிரிஷ் தீவனம் இதற்கு எல்லாம் குறைந்தபட்ச விலை வைத்தால் கூட 60 ரூபாய் கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு எதோ நஷ்டம் இல்லைனு சொல்லலாம்.
ஒரு மாடு காலை 5 லிட்டர் சாயங்காலம் மூனு லிட்டர் கறக்குனு வச்சுப்போம் 8 *29 =232
ரூபாய்…
தீவனம் காலை ஒரு கிலோ சாயங்காலம் ஒரு கிலோ 2*23 =46 ரூபாய்..
மாட்டுக்கு அரிசி கூலு இரண்டு வேளை .. = 50 ரூபாய்
தீனி தண்ணீ, , பில், தீவன தட்டு மினிமம் =70 ரூபாய்.
ஒரு ஆள் முழு நேரக் கூலி குறைந்தபட்சம் =250
மொத்தம் = 416 ரூபாய்
வரவு 232- 416 = – 184 ரூபாய்
அதாவது இங்கு உழைக்கும் ஒரு நபர் தன் வாழ்நாள் முழுவதும் எந்த வித கூலியுமே இல்லாமல் உழைத்து வருகிறார்..
பூமிக்கடியில் இலவசமாக கிடைக்கும் தண்ணீர் கூட RO plant போட்டு bottling செய்து 20 ரூபாய்னு விக்கிறார்கள். ஆனால் நாள் முழுவதும் உழைச்சாலும் நாலு ரூபாய் பார்க்கா நாயா அல்லல்பட வேண்டியிருக்கு.
நிலத்தை சும்மா வச்சு என்ன பன்றதுனு விவசாயத்தையும், வூட்டுக்கு பாலும் சாணியாவது கிடைக்கட்டும்னு மாடும் வச்சுனு இருக்கிறார்கள்.
உண்மையாகவே இரண்டுலயும் பத்து பைசா விவசாயிக்கு இலாபம் இல்லை..
இந்தமுறை மாடுகளுக்கு எல்லாம் அம்மை மோசமா புண் ஆகி உள்ள மாடுகள் எல்லாம் செத்ததும் உண்டு சாகர கண்டிஷனும் உண்டு…. மாட்ல வந்த காசு மாட்டுக்கு செலவு பண்றதுல போயிருக்கும்.. இதுல மாடு செத்து போனா இன்னும் மோசம்.
ஆனால் விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்புகள் அவங்க சேத்துல கால் வச்சாதான் நாங்க சோத்துல கை வைக்க முடியும் போன்ற டயலாக் மட்டும் குறைச்சலே இல்லை…
உண்மையாகவே எங்கள் நிலமை மோசமானதா இருக்கு..
5 ரூபாய் பால் விலை உயர்த்தினாலும் மழைக்காலங்களில் மறுபடியும் விலை குறைத்து நார்மல் விலைக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.. ஒரு நாளைக்கு SNF வரல FAT வரலனா ஏத்துன விலை ஆவரேஜ் ஆகிடும்..
5 ரூபாய் ஏத்தினாலே அய்யோ பால் விலை ஏறிடுச்சுனு பொங்க ஆரம்பிச்சிட்றாங்க மக்கள் ..
ஆனால் எங்க நிலையை யார் அறிவார்? யாருக்கு கவலை?