சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் தொடர்ந்து நான்காவது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை அணி. கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 27 ரன்கள் அடித்த போதிலும் பயனில்லை. தற்போது புள்ளிப்பட்டியில் 9வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் ஹைதராபாத் அணியும், 8வது இடத்தில் மும்பை அணியும் உள்ளன.
கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடினர். 49 பந்துகளில் 69 ரன்கள் அடித்திருந்த நிலையில், டேவான் கான்வே ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார். கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “கான்வே சிறப்பான பிளேயர் என்றாலும், ஜடேஜா கடைசி நேரத்தில் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர். கான்வே சில ஓவர்களாக பெரிய ஷாட்கள் அடிக்க சிரமப்பட்டு கொண்டிருந்தார். இதனால் ஏன் அவருக்கு பதில் ஜடேஜா இறங்க கூடாது என்று யோசித்தோம். இதனாலே அவர் ரிட்டயர்டு அவுட் ஆகி வெளியேற்றினார்” என்றார்
ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள சென்னை அணி, இந்த சீசன் முழுவதும் பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் பின்தங்கியே உள்ளது. சில கேட்சுகளை பிடித்திருந்தால் எளிதாக வென்று இருக்கலாம்.
ஆர்சிபி- டெல்லிக்கு எதிரான போட்டியிலும் சரி இதே தவறை தான் செய்தோம். இதனால் தான் போட்டியின் முடிவும் மாறியது. வெற்றி தோல்விக்கு 10, 20 ரன்கள் தான் வித்தியாசம். ஃபீல்டிங்கில் எங்களது முழு திறனை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இப்போது அது நடக்கவில்லை என்றார் ருதுராஜ்.
பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் அடித்து ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் தனி ஒருவராக ஆட்டத்தின்போக்கினை மாற்றினார். தற்போது ஐந்து போட்டியில் விளையாடி நான்கில் தோல்வியை சந்தித்துள்ளார். இதனால் தற்போது சென்னை அணியின் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட பறிபோகி உள்ளது. பிளே ஆப்க்கு தகுதி பெற இன்னும் மீதமுள்ள 9 போட்டிகளில் குறைந்தது 7ல் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற சிக்கலில் சிஎஸ்கே அணி இருக்கிறது.