ஏப்.24.
மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் பணிக்காலியிட (Pharmacist)போட்டித் தேர்வுகளுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக விரைவில்துவக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களைகொண்டுநடத்தப்பட உள்ளது. பயிற்சி கால அட்டவணை வாராந்திரத்தேர்வுகள் முழுமாதிரித்தேர்வுகள், இணையவழியில் நடத்தப்படும். கடந்த 2024-ஆம் ஆண்டு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி TNPSC-Gr-2. Gr-4. TNUSRB. TET பயிற்சி வகுப்புகளில் பல்வேறுமாணவர்கள் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகளில்SmartBoard இலவச Wifi வசதி. அனைத்துபோட்டித்தேர்வுகளுக்கானபுத்தகங்கள் அடங்கியநூலக வசதி, பயிற்சி கலை அட்டவணை. நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test), வாராந்திரத்தேர்வுகள், இணையவழித்தேர்வுகள் மென்பாடக்குறிப்புகள் (online test). மாதிரி தேர்வுகள். எடுத்துக்கொள்ள இணைய தளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த TNPSC-Gr-1. TNPSC-Gr-2. Gr-4, TNUSRB, TRB பயிற்சி வகுப்புகளில் அதிகபடியான மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத் துறைகளில்பணிபுரிந்து வருகின்றனர். ஆகவே மேற்காண் மருந்தாளுநர் பணிக்காலியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் விருப்பமிருப்பின் இப்பயிற்சி வகுப்பில்கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்விணையவழி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 25.04.2025 தேதிக்குள் நேரடியாகவோ அல்லது 94990-55912 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை மருந்தாளுநர் தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் பயன்படுத்திகொள்ளுமாறு கரூர்மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.