நவ.14.
சென்னையில் கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
பயிர் கடன் குறித்து பாதிக்கப்பட்ட இடங்களை கூட்டுறவுத் தறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு பார்வையிட்டு அறிக்கை அளித்ததும் முறைப்படி செய்ய வேண்டியவற்றை செய்வோம். நாளை கன்னியாகுமரி செல்ல இருக்கிறேன். மொத்த பாதிப்பு கணக்கீடு வந்தபிறகு அதை எல்லாம் தயார் செய்து பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால் இங்கே இருக்கிற அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.
கேள்வி- தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீர்கள்?.
பதில்- நான் அதைப் பற்றி கவலைப் படுவதே கிடையாது. என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது . அதற்காகத்தான் மக்கள் என்னை முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் . பெரிய வெற்றியை கொடுத்தார்கள். நான் இன்றைக்கும் சொல்கிறேன் ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வது எங்களுடைய கொள்கை. எதிர்க்கட்சிகள் என்ன புகார் சொன்னாலும் கவலையில்லை
அவர்கள் செய்த அக்கிரமத்தை அநியாயத்தை இந்த மழைக்காலம் முடிந்த பிறகு, அதற்கான கமிஷன் வைக்கப்பட்டு எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, நிச்சயமாக யார் குற்றவாளிகளோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.