ஏப்.25.
மதுரை கோட்டத்தின் கொடைக்கானல் சாலை – வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளைக் கருத்தில் கொண்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு ரயில் சேவை குறுகிய கால நிறுத்தப்படும்.
கோயம்புத்தூர்- நாகர்கோவில் (திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக) கோயம்புத்தூர் ஜங்ஷனில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16322 கோயம்புத்தூர்– நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 26 & 29, 2025 அன்று (2 நாட்கள்) திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குறுகிய கால நிறுத்தப்படும்.
கோயம்புத்தூர் ஜங்ஷனில் இருந்து திண்டுக்கல் ஜங்ஷன் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; அந்த நாட்களில் திண்டுக்கல் ஜங்ஷனில் இருந்து நாகர்கோவில் ஜங்ஷனுக்கு இயக்கப்படாது. இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.