மார்ச்.8.
ஈரோடு -கரூர் பிரிவில் உள்ள பாசூர் ஊஞ்சலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே வெல்டிங் மற்றும் டேம்பிங் உள்ளிட்ட தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்தப் பணிகளைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி மார்ச் 08, 11, 13 & 15, 2025 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும்.
குறுகிய கால ரயில் சேவைகள்-
திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், மார்ச் 08, 11, 13 & 15, 2025 ஆகிய தேதிகளில் கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய கால பயண நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது.
செங்கோட்டையிலிருந்து காலை 05.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண்.16846 செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ், மார்ச் 08, 11, 13 & 15, 2025 ஆகிய தேதிகளில் கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய நிறுத்தப்படும். இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து கரூர் வரை மட்டுமே இயங்கும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது.
பின்வரும் ரயில் சேவையின் தொடக்க நிலையம் மாற்றப்படும்-
ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2.00 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண்.16845 ஈரோடு -செங்கோட்டை எக்ஸ்பிரஸ், மார்ச் 08, 11, 13 & 15, 2025 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது; அந்த நாட்களில் கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயக்கப்படும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.