ஜன.23.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும். இடைத்தேர்தலில் வலுவான ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். அந்த வேட்பாளருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. கூட்டணி கட்சிகளும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டியது கடமை என செயல்பட வேண்டும். திமுக. -காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்பவர் பலம் வாய்ந்த கட்சி, பலம் வாய்ந்த வேட்பாளராக இருக்க வேண்டியது அவசியம். கூட்டணி மரபு, தர்மம் கடைபிடித்து அனைவரும் நடந்து கொண்டால் தான் மரியாதை . அதிமுக பெரிய கட்சி. அந்த தொகுதியில் பல முறை வெற்றி பெற்றுள்ளது. பலர் அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். என்றார்.