ஏப்.3.
பிரெயின் பீட் தனியார் நிறுவனம் அண்மையில் நடத்திய தலை சிறந்த பள்ளிகளுக்கான கள ஆய்வில் கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி பல்வேறு பிரிவுகளில் மாநில அளவில் தலை சிறந்த சிபிஎஸ்இ பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசின் பொதுத் தேர்வு, போட்டித் தேர்வு முடிவுகளில் தேசிய தொடர் சாதனைகளுக்கான கல்வியில் தலை சிறந்த பள்ளி விருது, கற்றல் கற்பித்தலில் காலத்திற்கேற்ற புதுமை செயல்பாட்டிற்கான தலை சிறந்த பள்ளி விருது, கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்தும் சிறந்த பள்ளிக்கான விருது ஆகிய பிரிவுகளில் விருதுகள் பெற்று மாநில அளவில் தலை சிறந்த சி.பி.எஸ்.இ பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஜே.இ.இ தேர்வில் 99.9 % பெற்ற ஹரிஸ்குமார் தற்போது சென்னை ஐ.ஐ.டி.யிலும், 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ அகில இந்திய பொதுத்தேர்வில் 494 மதிப்பெண் பெற்ற அக்சயா திருச்சி என்.ஐ.டியிலும், 494 மதிப்பெண் பெற்ற ரிதன்யா கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியிலும், ஜே.இ.இ தேர்வில் 95% மேல் பெற்ற மேலும் 3 மாணவர்கள் திருச்சி என்.ஐ.டியிலும் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 662 மதிப்பெண்கள் பெற்று தீபக் சேலம் மருத்துவக்கல்லூரியில் பயின்று வருகின்றார். தமிழ்நாடு அரசால் மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வில் இதுவரை 95 பரணி வித்யாலயா மாணவர்கள் வெற்றி பெற்று தமிழக அரசிடம் இருந்து மொத்தமாக முப்பத்து நாலு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய் பரிசுத்தொகை வென்றுள்ளனர். சர்வதேச அஞ்சல் அமைப்பு நடத்திய கடிதம் எழுதும் போட்டியில்சார்பில் பரணி வித்யாலயா ஆதிரா மணிகண்டன் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் முதலிடம் பிடித்து ரூ.75,000/-க்கான காசோலை பெற்றுள்ளார். “ஹெச்.சி.எல்” பன்னாட்டு நிறுவனம் அகில இந்திய அளவில் நடத்திய போட்டியில் பரணி வித்யாலயா பள்ளியின் 51 பேர் “தேசிய அளவில் சிக்கல்களை தீர்க்கும் இளம் வல்லுநர்” விருது பெற்று தமிழக ஆளுனரால் பாராட்டப்பட்டுள்ளனர். பரணி வித்யாலயா யாழினி அகில இந்திய சாப்ட் டென்னிஸ் தர வரிசையில் முதலிடம் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
நடப்பு கல்வியாண்டில் மாநில அளவில் தலைச்சிறந்த பள்ளிக்கான விருது, சிறந்த கல்வியாளருக்கான விருது, கல்வி, விளையாட்டு, அறிவியல், ஒலிம்பியாட், பன்முகத்திறன் திருவிழா என அனைத்திலும் சர்வதேச, தேசிய, மாநில சாதனைகளை வாழ்த்தும் விதமாக பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். இத்தகு பெருமைமிகு வெற்றிக்குத் தலைமையாகவும், உறுதுணையாகவும் இருக்கும் பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர்.சொ.ராமசுப்பிரமணியன், முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.