ஏப்.23.
கரூர் பெரிய ஆண்டான் கோவில், காவக்கார தெருவில் உள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற, சுமார் 10-15 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
மேற்படி இறந்து போன சிறுவர்கள் தொடர்பான விவரங்கள் ஏதும் தற்போது வரை தெரியவில்லை. தீயணைப்பு படை வீரர்கள் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேற்படி இறந்து போன இரண்டு சிறுவர்களின் பிரேதமும், அமராவதி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது…இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு கரூர் டவுன் போலீசார் தெரிவித்துள்ளனர் .