ஜன.27.
முதலமைச்சர் அவர்கள் தமிழ் நாட்டைச் சார்ந்த மறுவேலை வாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்னும் புதிய திட்டத்தினை அற்முகப்படுத்தியுள்ளார்கள். அதன்படி, தமது தாய் நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப்பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்று ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில், தொழில் தொடங்க வங்கிகள் முலம் பெறப்படும் ஒரு கோடி ருபாய் வரையிலான கடன்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியமும் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
அதன்படி, தொழில் தொடங்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்களுக்கு திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப்பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் இராணுவப்பணியின் போது உயிரிழந்த முன்னாள் படை வீரர்களின் மறுமணம் செய்து கொள்ளாத கைம்பெண்கள் மற்றும் முன்னாள படைவீரர்களைச் சார்ந்து வாழும் 25 வயதிற்குட்பட்ட திருமணமாகாத மகன். திருமணமாகாத மகள் மற்றும் கைம்பெண்மகள்கள் இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கருர் மாவட்டத்தில் பதிவு செய்து மறுவேலை வாய்ப்பு பெறாமல் உள்ள முன்னாள் படைவீரர்கள், படைப்பணியின் போது மரணமடைந்த படை வீரர்களின் மறுமணமாகாத கைம்பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்து வாழும் 25 வயதிற்குட்பட்ட திருமணமாகாதமகன். மகள் மற்றும் கைம்பெண்மகள்கள் ஆகியோர் மேற்காணும் திட்டத்தில் தொழில் தொடங்கி பயனடையலாம்.
இத்திட்டத்திற்கான வழிமுறைகள்
முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 55.
25 வயதிற்குட்பட்ட மணமாகாதமகன், மணமாகாதமகள்கள் மற்றும் கணவனை இழந்த கணவனை பிரிந்த மகள்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 அதிகபட்ச வயது வரம்பு 55
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ண்பிக்க குறைந்தபட்ச கல்விதகுதி ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை. மேலும் இது தொடர்பாக விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படும் துணை இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (0431- 2960579) தொடர்பு கொண்டு பயனடையுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.