ஜன.12.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து அவர் தலைமறைவானார் . பின்னர் பெங்களூரில் தமிழக போலீசார் அவரை கைது செய்தனர்.
திருச்சி மத்திய சிறையில் ராஜேந்திரபாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; வெளியூர் செல்லக்கூடாது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவும் நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது.
ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் அளித்தது உத்தரவிட்டனர்.