ஜன.14.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சிறந்த காளையின் உரிமையாளருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், மற்றும் சிறந்த மாடுபிடி வீருக்கு நிசான் காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்., மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கேத் தலைமையில் மாடு பிடிவீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.
அவனியாபுரத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவனியாபுரத்தில் 15 ஆம்புலன்ஸ் வண்டிகளும், சுமார் 26 மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளது.
முன்னதாக மாடு பிடிவீரர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். முதல் சுற்றில் மஞ்சள் நிற டீசர்ட் அணியின் காளைகளை அடக்கினர்.