நவ.3.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது கணக்கு குழுவினர் கரூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர். செல்லாண்டிபாளையத்தில் சாயக்கழிவு சுத்திகரிக்கும் மேலாண்மை நிலையத்தை பார்வையிட்டனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தமிழ் எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு மற்றும் பாறை சமனர்படுக்கை போன்றவற்றையும் ஆய்வு செய்தனர் தமிழ் எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு மற்றும் படுக்கை போன்றவை பராமரிப்பு குறித்து கேட்டறிந்தனர். அமராவதி தடுப்பனையில் உள்ள நீரின் தரம் ,அளவு, உப்பு தன்மை குறித்து ஆலோசனை வழங்கினார். காந்தி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள வசதி உணவின் தரம் குறித்து செல்வப் பெருந்தகை கேட்டறிந்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபுசங்கர், எஸ்பி சுந்தரவதனம், மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் வேல்முருகன், பூண்டிகலைவாணன், காந்திராஜன், டாக்டர் சரஸ்வதி, சுதர்சனம், ஓம் பிரகாஷ் , மாரிமுத்து, அருண்குமார், மாணிக்கம், இளங்கோ, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.