மே.10.
கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போலியான பான் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை சட்ட விரோதமாக தயார் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்த கார்த்திக், 25/25, ஆதினத்தம், கணேசபுரம், குளித்தலை, கரூர் மாவட்டம், (ஆதார் ஆப்பரேட்டர், தற்காலிக பணியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்), ஜெயக்குமார் 43/25, பலமாபுரம், பூலாம்பாளையம், புகழூர், கரூர் மாவட்டம் (Insurance & Share Market – Agent), சம்பத்குமார், 29/25, பாரதிதாசன் நகர் 6வது கிராஸ், தாந்தோணிமலை, கரூர் மாவட்டம் (இ-சேவை மையம்), நவீன், 30/25, திட்டசாலை, மெயின் ரோடு, வெங்கமேடு, (Niranjan Xerox Shop, திண்ணப்பா தியேட்டர் அருகில), ஸ்ரீனிவாசன், 42/2, அண்ணா நகர் தெற்கு, (Unique Xerox Shop) கலைவாணி ஜெனிபர், 39/25, அருணாச்சலம் நகர் 3வது கிராஸ், பசுபதிபாளையம், கரூர் மாவட்டம் (இ-சேவை மையம்) ஆகியோர்களை கோயம்புத்தூர் மாவட்டம், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் – 06, CPU – 01, Laptop -01, ஆதார் படிவம் – 69, பான்கார்டு – 132 மற்றும் போலியாக தயார் செய்யப்பட்ட சீல் – 01 ஆகியவற்றை கைப்பற்றியும், மேலும் கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, உத்தரவின் பேரில் கரூர் உட்கோட்ட டிஎஸ்பி. செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்னன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது
மே.11. கரூர் அருள்மிகு மாரியம்மன் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது....