ஜன.3.
கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செல்போன் மூலம் இயக்கும் தானியங்கி பம்ப்செட் கருவி (Mobile Phone Operated Automatic Pumpset Controller/Remote Motor Operator for Electric Pumpset) மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கருவியைப் பயன்படுத்தி விவசாய கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்ப் செட்டுகளை வீட்டில் இருந்த படியும், வெளியூர்களில் இருந்த படியும் இயக்கவும். நிறுத்தவும் முடியும். இதற்கு மானியமாக சிறு / குறு / பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கருவியின் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.7000 வரை மானியமாக வழங்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40% அல்லது அதிகபட்சமாக ரூ.5000/- வரை மானியமாக வழங்கப்படும்.
தற்போது கரூர் மாவட்டத்தில் பொதுப்பிரிவுக்கு 152 எண்களும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு 5 எண்களும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே. விருப்பமுள்ள விவசாயிகள் கரூர் மற்றும் குளித்தலை வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம் (அலைபேசிஎண்: 9443156424), அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம். கரூர் (அலைபேசிஎண்:9443567583), மற்றும் குளித்தலை (அலைபேசிஎண்: 9443922630)அல்லது வட்டார அளவில் உதவிபொறியாளர் (வே பொ), இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.