• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Friday, November 14, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

கரூர் விஷவாயு தாக்கிய 3 பேர் பலியான விபத்தில் அதிர்ச்சி: மேலும் ஒரு சடலம் மீட்பு

karurxpress by karurxpress
November 17, 2022
in கரூர்
0
130
VIEWS

நவ.17.

கரூர் அருகே கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கியத்தில் மூன்று பேர் இறந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவலாக மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கரூர் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 15 ம் தேதி மோகன்ராஜ், சிவகுமார் , ஆகியோர் கழிவு நீர் தொட்டி கட்டுமானங்களை அகற்ற சென்றபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர் . இதுபற்றி அறிந்து இவர்களை காப்பாற்ற சென்ற மற்றொரு கட்டிட தொழிலாளி ராஜேஷ்என்பவரும் விஷவாயு தாக்கியதில் பலியானார். கரூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்போது மணவாசி சின்னமலை பட்டியை சேர்ந்த கோபால் என்பவரது சடலமும் நான்காவதாக கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலியானதை கேள்விப்பட்ட கோபால் குடும்பத்தினர் இது குறித்து கோபாலை தேடி வந்தனர். கட்டட வேலைக்கு சென்ற அவரைக் காணவில்லை என காவல் துறையில் புகார் அளித்தனர். கோபாலின் சகோதரர் சம்பவம் நடந்த கட்டட பகுதியில் சென்று தேடிப் பார்த்தபோது அவரது செருப்பு அப்பகுதியில் கிடந்தது தெரிய வந்தது. மேலும் அவரது உடைகளும் காணப்பட்டது. உடனடியாக இது குறித்து கரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மீண்டும் தீயணைப்பு படை வீரர்கள் இறங்கி கோபால் சடலம் கண்டெடுக்கப்பட்டது ‌.

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . விஷவாயு குழி என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன், தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கி முதலில் மூன்று பேரை மீட்டனர். மேலும் மூன்று பேர் குழியில் சிக்கியிருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாலும் மயங்கிய நிலையில் இருந்த அவர்களை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மேற்கொண்டு அங்கு தேட வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. மூன்று பேர் தான் என அங்கிருப்பவர்கள் கூறியதாலும், வெளிச்சம் இல்லாததாலும் விஷவாயு தாக்கம் இருந்ததாலும் மேற்கொண்டு இறங்கி தேடாமல் திரும்பி விட்டனர். எத்தனை பேர் வேலைக்கு வந்தனர் ‌‌ எத்தனை பேர் பணியில் இருக்கின்றனர் என்ற விபரம் கூட தெரியாமல் கட்டுமான நிறுவனம், வேலை வாங்கியவர்கள் செயல்பட்டு இருக்கின்றனர். வாரம் முடிவில் சம்பளம் கொடுக்க வேண்டும் ஆள் வராவிட்டால் கவலை இல்லை என்கிற மெத்தென போக்கில் செயல்பட்டுள்ளனர். மேலும் ஓருவரை காணவில்லை சந்தேகமாக இருக்கிறது என அப்போதே தெரிவித்து இருந்தால் தீயணைப்பு படையினர் அவரது சடலத்தையும் மீட்டு இருப்பார்கள். இதை கவனிக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மெத்தன போக்கினால் மேலும் ஒரு உயிர் பறிபோய் உள்ளது. தற்போது கோபாலின் சகோதரர் அளித்த தகவலின் பெயரில் மீண்டும் இறங்கி தேடி சடலத்தை மீட்டுள்ளனர்.

Related Posts

போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

by karurxpress
November 14, 2025
0

கரூர்‌.நவ.14. கரூர் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (TN...

பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

by karurxpress
November 14, 2025
0

நவ.15 . கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:- வடகிழக்கு பருவமழை...

குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

by karurxpress
November 14, 2025
0

நவ.15. கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் “நிறுவன அறங்காவலர் சாமியப்பர் நினைவு...

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

by karurxpress
November 14, 2025
0

கரூர். நவ. 14. 58 -ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு,...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

November 14, 2025
பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

November 14, 2025
குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

November 14, 2025
தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

November 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved