ஏப்.7.
கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி (குழந்தைகள்) மையங்களில் காலியாக உள்ள 2 முதன்மை அங்கன்வாடி பணியாளர் 14 குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் 44. அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. கரூர் மாவட்டத்தில் நேரடி நியமனம் செய்யப்படவுள்ள முதன்மை அங்கன்வாடி பணியாளர் குறு அங்கன்வாடி பணியாளர். மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையதளத்தில் www.icds.tn.gov.in மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 25.04.2025 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் உரிய ஆவணங்களூடன் சமர்ப்பிக்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணிநியமணம் செய்யப்படும் முதன்மை குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் (ஓராண்டு) பணியினை முடித்த பின் அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் வழங்கப்படும்.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட அங்கன்வாடி உரிய (குழந்தை) மையம் அமைத்துள்ள வட்டாரக் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ்கள், குடும்ப அட்டை / ஆதார் அட்டை சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட (Self Attested) இணைக்கப்பட வேண்டும். விதவை கணவனால் கைவிடப்பட்டோர். ஆதரவற்ற பெண். (தாய்/ தந்தை இறப்புசான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சான்றொப்பமிட்டு (Self Attested) இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.