• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Monday, May 12, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home தமிழகம்

அதானியின் முறைகேடு- மோசடிகள்: பட்டியல் போட்டு அம்பலப்படுத்திய காங்கிரஸ்

karurxpress by karurxpress
May 18, 2023
in தமிழகம்
0
134
VIEWS

பிப்.17.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். கே.எஸ். அழகிரி தலைமையில், தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது கூறியது-

பல ஆண்டுகளாக அமலாக்கப்பிரிவு. சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் போன்ற ஏஜென்சிகளைத் தவறாகப் பயன்படுத்தி, தனது அரசியல் அல்லது கருத்தியல் எதிரிகளை மிரட்டவும், தனது நிதி நலன்களுக்கு இணங்காத வணிக நிறுவனங்களைத் தண்டிக்கவும் பிரதமர் மோடி பயன்படுத்தியுள்ளார்.

1992 ஆம் ஆண்டில், ஹர்ஷத் மேத்தா வழக்கை விசாரிக்க ஒரு நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில், கேதன் பரேக் வழக்கை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரித்தது. அன்றைய பிரதமர்கள் நரசிம்மராவ் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய இருவரும், கோடிக்கணக்கான இந்திய முதலீட்டாளர்களைப் பாதித்த ஊழல்களை விசாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். பிரதமர் மோடிக்கு என்ன பயம்? அவருக்கு கீழ் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என்ற நம்பிக்கை இல்லையா?

இந்த மோசடி நடந்து கொண்டிருக்கும் போது செபி என்ன செய்து கொண்டிருந்தது? இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானதைத் தொடர்ந்து பங்கு விலைகளில் ஏற்பட்ட சரிவு. செயற்கையாக உயர்த்தப்பட்ட விலைகளால் ஏமாற்றப்பட்டு, அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்த லட்சக்கணக்கான சில்லறை முதலீட்டாளர்களை நிதி ரீதியாகப் பாதிப்படையச் செய்துள்ளது.

2023 ஜனவரி 24 முதல் பிப்ரவரி 15 வரை அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு ரூ.10.50.000 கோடி சரிந்தது. ஜூலை 19, 2021 அன்று, செபியின் விதிமுறைகளை மீறியதற்காக அதானி குழுமம் விசாரணையில் உள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

அதானி குழுமத்தில் எல்ஐசி வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 30 டிசம்பர் 2022 அன்று ரூ.83,000 கோடியிலிருந்து ரூ. 39,000 கோடியாகக் குறைந்தது. பங்குகளின் விலை வீழ்ச்சி மற்றும் குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், 30 ஜனவரி 2023 அன்று அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்யும்படி எல்ஐசியை மோடி அரசாங்கம் நிர்ப்பந்தித்தது.

கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேசிய பிரதமர் மோடிக்குப் பிடித்த அதானி வணிகக் குழுமம் வெளிநாட்டுப் போலி நிறுவனங்கள் மூலம் பங்கு விலைகளைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் பங்குகளில் 4.5 பில்லியன் டாலர்கள் (ரூ. 37,000 கோடி ) மான்டெரோசா குழுமத்திடம் உள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத், அதானியின் மகளைத் திருமணம் செய்து கொண்டவர். தப்பியோடிய வைர வியாபாரிக்கும் இதில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. விமான நிலையங்களைக் கையாளுவதில் அனுபவமே இல்லாத அதானி குழுமத்துக்கு கடந்த 2019 ஆம் ஆண்டில், அகமதாபாத், லக்னோ, மங்க ளூரு, ஜெய்ப்பூர், குவகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களைக் கையாளும் உரிமம் வழங்கப்பட்டது.

துறைமுகங்கள்:

அதானி குழுமம் இன்று 13 துறைமுகங்கள் மற்றும் முனையங்களைக் கையாளுகிறது, குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்துடன் கூடுதலாக, தாம்ரா துறைமுகம், ஒடிசா (2015), காட்டுப்பள்ளி துறைமுகம். தமிழ்நாடு (2018), கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகம், ஆந்திரப் பிரதேசம் (2020). கங்காவரம் துறைமுகம், ஆந்திரப் பிரதேசம் (2020) ஆகியவை அடங்கும்.

வெளிநாட்டுப் போலி நிறுவனங்களால் பணமோசடி செய்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒரு நிறுவனத்தை -தொழிற்துறையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது தேசியப் பாதுகாப்புக்கு நல்லதா? என்ற கேள்வி எழுகிறது.

பிரதமர் மோடியுடன் பல வெளிநாட்டுப் பயணங்களில் கவுதம் அதானி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 4-6 2017 இல் அவர் இஸ்ரேலுக்குச் சென்ற பிறகு. முன் அனுபவம் இல்லாத போதிலும், ட்ரோன்கள். எலக்ட்ரானிக்ஸ், சிறிய ஆயுதங்கள் மற்றும் விமானப் பராமரிப்பு ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளுடன் இந்தியா-இஸ்ரேல் பாதுகாப்பு உறவில் அவருக்கு லாபகரமான பங்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி 2018 இல், வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக கோடா மின் நிலையத்தைச் சிறப்புப் பொருளாதார மண்டலமாக அமைக்க அதானி பவர் விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், வர்த்தக அமைச்சகம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது, இருந்தும் 9 ஜனவரி 2019 அன்று. வர்த்தக அமைச்சகம் தனது பார்வையை மாற்றி, அந்த வழிகாட்டுதல்களைத் திருத்தியது.

சிறிது காலத்திற்குப் பிறகு. 25 பிப்ரவரி 2019 அன்று, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான ஒப்புதல் வாரியம் அதானி பவரின் விண்ணப்பத்தை அங்கீகரித்தது. இந்தக் கொள்கை மாற்றத்தால், நிலக்கரி இறக்குமதி வரிகள் நீக்கப்பட்டதன் மூலம் அதானி பவர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி லாபம் கிடைத்தது.

அதானியின் அசுர வளர்ச்சிக்கு யார் காரணம் ?

மோடி பிரதமராக பதவியேற்ற 2014 ஆம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609-வது இடத்தில் இருந்த கௌதம் அதானி. 2022-ல் இரண்டாவது இடத்திற்கு வந்த அதிசயத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அசுர வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆதரவு தான் காரணம் என்பதை எவராவது மறுக்க முடியுமா ?

மோடி அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிஏஜி, சிபிஐ போன்ற அனைத்து அரசு நிறுவனங்களின் கைகளையும் கட்டிப் போட்டிருக்கலாம். ஆனால் உண்மை வெளிப்பட்டே தீரும் என்பதையே அதானியின் வீழ்ச்சி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனை, அமலாக்கத்துறையோ, சிபிஐ அமைப்போ முயன்றாலும் மறைக்க முடியாது. இது ஆரம்பம் தான்… பாஜகவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறப்போவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

Related Posts

சென்னை சென்ட்ரல்- கன்னியாகுமரி சிறப்பு ரயில்: கரூர் வழியாக இயக்கம்

by karurxpress
April 9, 2025
0

ஏப்.9. கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, தமிழ் புத்தாண்டு, விஷு மற்றும் ஈஸ்டர் பண்டிகைகளை முன்னிட்டு...

மலைப்பிரதேச 2வது மருத்துவ கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்

மலைப்பிரதேச 2வது மருத்துவ கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்

by karurxpress
April 6, 2025
0

https://twitter.com/TNDIPRNEWS/status/1908771498388554048?t=4oTeGGR3aYZV5MXX_P2acg&s=19 இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ரூ.143.69 கோடி...

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

by karurxpress
April 6, 2025
0

https://twitter.com/GMSRailway/status/1908791341091373431?t=JCNbs2FDZzZmQbFPLU3MKg&s=19 பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய...

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

by karurxpress
March 27, 2025
0

மார்ச்.27. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

May 12, 2025
கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

May 10, 2025

போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

May 10, 2025
காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

May 8, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved