மே.3.
கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், வெள்ளியணை காவல் நிலைய சரகம், புலியூர் -உப்பிடமங்கலம் சாலையில் உப்பிடமங்கலம் கடைவீதியில் 2ம் தேதி பசுபதிபாளையம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில்0சப்இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக உப்பிடமங்கலம் வந்த TN 47 BA 0346 என்ற பதிவு எண் கொண்ட மாருதி Eco காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் பாண்டிச்சேரி மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, காரை ஓட்டி வந்த கார்த்திக்ராஜ், வயது 29. வடக்கு தெரு, உப்பிடமங்கலம் என்பவரை விசாரணை செய்ததில் பாண்டிச்சேரியிலிருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக பாண்டிச்சேரி மதுபானம் 750 ML அளவு கொண்ட 65பாட்டில்களும், 375 MLஅளவு கொண்ட 170 பாட்டில்களும்,180 ML அளவு கொண்ட 44பாட்டில்களும் என சுமார் ரூ.1,50,000/- மதிப்புள்ள 279 மது பாட்டில்களும், பணம் ரூ. 50,000/-, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி Eco காரையும் பறிமுதல் செய்து மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
வாகன தணிக்கையின்போது சட்டவிரோதமாக பாண்டிச்சேரி மதுவை கடத்தி வந்த நபரையும், அவர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றிய பசுபதிபளையம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸ் படையினரை கரூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துலா பாராட்டினார்.
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது
மே.11. கரூர் அருள்மிகு மாரியம்மன் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது....