பிப்.4.
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெற்றது. கடம்பவனேசுவரர்- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் கடம்பர் கோயில், பெட்டவாத்தலை மத்தியார்சுனேசுவரர், ராஜேந்திரம் மத்தியார்சுனேசுவரர் கோவில், ஐயர் மலை ரத்ததினகிரீசுவரர் கோயில், திருஈங்கோய்மலை மரகதலேசுவரர் கோயில், முசிறி சந்திரமவுலீசுவரர் கோயில், வெள்ளூர் திருகாமேஸ்வரர் கோயில், கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோயில் சாமிகள் கடம்பர் கோவிலில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காவிரிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. எட்டு கோயில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளிய தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.