ஆக.12.
முதலமைச்சர் அவர்கள் கோயமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வரலாற்று சிறப்புமிக்க தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தங்கவேல் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000-ம் பெறுவதற்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த 35 கல்லூரிகளைச் சேர்ந்த 3.949 தகுதி பெற்ற மணவர்கள் முதல் கட்டமாக இத்திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். 13 கல்லூரிகளில் பயிலும் 350 மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது அதற்கான பரிவர்த்தனை வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சரவணன், மண்டல தலைவர் கனகராஜ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட அலுவலர் விணோதினி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி மண்டல மேலாளர் மாரி செல்வம். மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் வசந்தகுமார். கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.