மே.7.
கரூர் மாரியம்மன் திருவிழா வரும் 11ஆம் தேதி (ஞாயிறு) கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்குகிறது. 16ஆம் தேதி (வெள்ளி) பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. மாரியம்மன் கோவில் அனைத்து பூச்சொரிதல் விழா கமிட்டி கூட்டம் நகரத்தார் மண்டபத்தில் நடைபெற்றது. கரூர் டிஎஸ்பி. செல்வராஜ் தலைமை வகித்து பேசினார். இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், முத்துக்குமார், ஷஹீரா பானு, நந்தகோபால், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் ஆகியோர் பேசினர். பூச்சொரிதல் விழா கமிட்டி தலைவர் டிசி.மதன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் பாலு, பொருளாளர் ரமேஷ், நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராகவன், பாலன், சுந்தர்ராஜ், பெரியசாமி முருகேசன் உள்ளிட்ட பூத்தட்டு கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.