நவ.2.
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் பொருட்டு, இன்று சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, 24×7 செயல்படும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட போது.. 12,36,725 புகார்களில் 99% புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார் .
சென்னையில், பகல் நேரத்தில் 1440 ஊழியர்களும் இரவு நேரத்தில் 600 ஊழியர்களும் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் .ராஜேஷ் லக்கானி, இயக்குநர்/பகிர்மானம் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.