• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Monday, July 14, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home Uncategorized

10வது முறை வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய அரசுக்கு ம.நீ.ம. கண்டனம்

karurxpress by karurxpress
December 2, 2021
in Uncategorized
0
130
VIEWS

டிச.2.

ம.நீ.ம மாநில செயலாளர் பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை-

சர்வதேச சந்தையில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை இறங்குமுகமாக இருந்து அம்மாத இறுதியில் ஒரு பேரல் 72டாலர் என்கிற நிலையில் இருந்தும் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தைக் காட்டி வணிக பயன்பாட்டிற்கான 19கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலையை நடப்பாண்டில் மட்டும் 10வது முறையாக 101.00ரூபாய் உயர்த்தி கடந்த ஜனவரி மாதம் 1463.50என இருந்த சிலிண்டர் விலையை தற்போது டிசம்பர் மாதம் 2234.50 என்கிற விலைக்கு கொண்டு வந்து ஓராண்டிற்குள் சுமார் 770.00ரூபாய் உயர்த்தி உணவகங்கள், தேனீர் கடை உரிமையாளர்கள் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியிருக்கும் ஒன்றிய அரசுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் முற்றிலுமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தொழிலாளர்களுக்கு ஊதியமும், கடை வாடகையும் கொடுக்க இயலாமலும், மின்கட்டணம் கூட செலுத்த முடியாத சூழ்நிலையிலும் சிக்கி உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவோர் கடுமையான இன்னல்களை சந்தித்து வரும் வேளையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் தொடர்ச்சியாக உயர்த்துவதையே வாடிக்கையாக கொண்டிருப்பதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வரும் சூழலில் கூட அதன் பலனை பொதுமக்களுக்கும், உணவகங்கள், தேனீர் கடை உரிமையாளர்களுக்கும் வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களின் கஜானாவை மட்டுமே நிரப்பிட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு மேலும், மேலும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திக் கொண்டே செல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த தொடர் விலை உயர்வு காரணமாக உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவோர் பெருத்த இழப்பை சந்தித்து வருவதோடு, தற்போதைய சூழலில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியே ஆகவேண்டும் என்கிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே நடப்பாண்டில் 10வது முறையாக உயர்த்தப்பட்டுள்ள வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 72டாலர் என்கிற நிலைக்கு குறைந்திருப்பதால் 19கிலோ சிலிண்டர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 500.00ரூபாய் வரை விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் வலியுறுத்துகிறோம்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
மாநில செயலாளர்
மக்கள் நீதி மய்யம் – தொழிலாளர் நல அணி.
02.12.2021

Related Posts

அரசியல் காழ்ப்புணர்வில் குற்றச்சாட்டுகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்

அரசியல் காழ்ப்புணர்வில் குற்றச்சாட்டுகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்

by karurxpress
June 12, 2023
0

ஜூன்.12. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர்...

முன்னாள் அதிமுக  அமைச்சர்கள் விஜயபாஸ்கர் -கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் -கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

by karurxpress
May 22, 2023
0

மே.22. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கேபி அன்பழகன் ஆகியோர் மீது...

டாஸ்மாக் இல்லாமல் எடப்பாடி ஆட்சி நடத்தினாரா?.

by karurxpress
May 18, 2023
0

மே.3. டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது. நிர்வாக சீர்திருத்தம் செய்யும்போது,...

தத்தளித்த மின் வாரியம்: உற்பத்தி அதிகரிப்பு: நஷ்டம் குறைப்பு காரணமாக முன்னேற்ற பாதையில் செல்கிறது

by karurxpress
May 18, 2023
0

ஏப்.14. வாரியத்திற்8 உத்திரவுகவழல் மீன் உற்பத்தி வளப்து. குறிப்பாகஏேற்படுத்தப்பட்டுள்ளதுஓப்பிட்டு பாய்கின்றபோது வே தடைப்பற்ற...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 179 இடங்களில் சிறப்பு முகாமகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 179 இடங்களில் சிறப்பு முகாமகள்

July 11, 2025
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம்: பணி துவக்கம்

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம்: பணி துவக்கம்

July 11, 2025

பாலக்காடு ரயில் குறுகிய கால நிறுத்தம்

July 11, 2025
கரூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு: ரூ.162 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு: ரூ.162 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

July 11, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved