அக்.31.
திண்டுக்கல் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை எளிதாக்குவதற்காக, நவம்பர் 01, 06 & 08, 2025 ஆகிய தேதிகளில் இரண்டு ரயில் சேவைகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
பின்வரும் ரயில் சேவைகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.:-
நாகர்கோவில் சந்திப்பிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்படவுள்ள ரயில் எண்.16321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், விருதுநகர் கரூரில் இடையே மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக நவம்பர் 01, 06 & 08 ஆகிய தேதிகளில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பத்துரை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ரயில் நிலையங்களில் நின்று செல்வதற்கு பதிலாக, மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ரயில் நின்று செல்லும்.
கோவையில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16322 கோயம்புத்தூர்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், நவம்பர் 01, 06 & 08 ஆகிய தேதிகளில் கரூர் விருதுநகர், திருச்சிராப்பள்ளி, காரைக்குடி மற்றும் மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும், எரியோடு, திண்டுக்கல், திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ரயில் நிலையங்களளில் நிற்காது. மாற்றுப்பாதையில் திருச்சிராப்பள்ளி ஜே.என்., புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் ரயில் நின்று செல்லும்.
ரயில் சேவைகளை பகுதியளவு ரத்து செய்தல்
மதுரை கோட்டத்தில் உள்ள வாடிப்பட்டி -சமயநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு ஜோடி ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்படும்.
- ஈரோடு சந்திப்பிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண்.16845 ஈரோடு சந்திப்பு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், 31.10.2025 முதல் 29.11.2025 வரை திண்டுக்கல் செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும், செவ்வாய் கிழமைகள் 04, 11, 18 & 25 நவம்பர், 2025 தவிர. இந்த ரயில் ஈரோட்டிலிருந்து திண்டுக்கல்லுக்கு மட்டுமே இயக்கப்படும், மேற்கூறிய தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படாது.
- செங்கோட்டையில் இருந்து காலை 05.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16846 செங்கோட்டை- ஈரோடு சந்திப்பு விரைவு ரயில், 01.11.2025 முதல் 30.11.2025 வரை செங்கோட்டை திண்டுக்கல் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும், புதன்கிழமைகள் -05, 12, 19 & 26 நவம்பர், 2025 தவிர. இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து திண்டுக்கல்லுக்கு இயக்கப்படாது, மேற்கூறிய தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை இயக்கப்படும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.











