ஆக9.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம். நெரூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ள ரூ. 32.89 இலட்சம் மதிப்பீட்டில் 13 புதிய மின்கல வாகனங்கள் மற்றும் ரூ2.48 இலட்சம் மதிப்பீட்டில் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை 44 தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
முதலமைச்சர் அவர்கள், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும். முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு. பேறு கால மருத்துவம், குழந்தைகள் நலம், இதய நலம், நரம்பியல். நுரையீரல், நீரழிவு, தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம். இயன்முறை மருத்துவம். சித்த மருத்துவம். உணவியல் மருத்துவம். ஆகிய 17 சிறப்பு மருத்துவ சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் அனைத்து சிகிச்சைகளும் பரிசோதனைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் மொத்தம் 24 முகாம்களும் கரூர் மாநகராட்சியில் 3 முகாம்களும் என மொத்தம் 27 முகாம்கள் பிப்ரவரி 2026 வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள். வளர்ச்சி குன்றிய குழந்தைகள். நீரழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதய நோயாளிகள். படுக்கையுற்ற நோயாளிகள். மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுகிறது என செந்தில் பாலாஜி தெரிவித்தார். எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி மாவட்ட வருவாய் கண்ணன். இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு. செழியன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு சுப்பிரமணியன். பாஸ்கரன் கலந்துகொண்டனர்.












