நவ.5.
கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC-IST) தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் 24X7 பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது விபரங்களை தட்டச்சு செய்து 21-11-2025 பிற்பகல் 5.45 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியர். கரூர் மாவட்டம் என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இப்பதவிக்கான மாதிரி விண்ணப்பம் கரூர் மாவட்ட இணையதத்தில் https://karur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பதவி- பல்நோக்கு உதவியாளர்(Multipurpose Helper). கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். எட்டாம் வகுப்பு பயின்ற பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ககப்படுகின்றன. 3.ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக் தகுதியுடையவர். 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். சுழற்சி முறையில் பணி. மாத ஊதியம் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வழங்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.












